அதிமுக, திமுக போட்டி போட்டு கள்ள ஓட்டு: மதிமுக
சென்னை:
திமுகவினரும் அதிமுகவினரும் போட்டி போட்டுக் கொண்டு கள்ள ஓட்டு போட்டு வருவதாக மதிமுக புகார்கூறியுள்ளது.
சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுகவினர் பெரும் அடாவடியில் ஈடுபட்டு வருவதாகவும் 50,60 பேர் கொண்டகும்பல்கள் ஒவ்வொரு வாக்குச் சாடியிலும் நின்று கொண்டு ரவுடித்தனம் செய்து வருவதாகவும் மதிமுக வேட்பாளர்ப.சுப்பிரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுகவினருக்கு போட்டியாக திமுகவினரும் கள்ள ஓட்டுக்கள் போட்டு வருவதாகவும் கூறியுள்ள அவர் இதுதொடர்பாக மத்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையர், காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு தந்திஅனுப்பியுள்ளார்.
ஜெயராம்தெருவில் உள்ள வாக்குச் சாவடியில் போலி சான்றிதழுடன் ஒரு பெண் வாக்களித்தார். அவருக்குஅதிமுகவினர் உதவினர் என்றும் அவர் கூறினார். இது போல பரவலாக கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாகவும்அதை போலீசார் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் வாக்குப் பதிவை கண்காணிக்கச் சென்ற அவரை அதிமுகவினர் சுற்றி வளைத்து கொலை மிரட்டல்விடுத்ததாகவும் கூறப்படுகிறது.