For Daily Alerts
Just In
அதிமுகவினர் தேர்தல் முறைகேடு: சைதையில் மறு தேர்தல் கோருகிறது திமுக
சென்னை:
சைதாப்பேட்டையில் அதிமுகவினர் கடும் வன்முறையில் ஈடுபட்டு தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டதால் அங்குமறுதேர்தல் நடத்த வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று சைதாப்பேட்டையில் நடந்த இடைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது கள்ள ஓட்டு போட்டவர்களைத் தடுத்ததிமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி அதிமுகவினரால் தாக்கப்பட்டார்.
இது குறித்து ஆளுநர் ராம்மோகன் ராவிடம் திமுக புகார் மனு கொடுத்துள்ளது. திமுக பொதுச் செயலாளர்அன்பழகன், எம்.பி. சண்முகசுந்தரம் ஆகியோர் ஆளுநரை நேரில் சந்தித்து இந்த மனுவைக் கொடுத்தனர்.
இதற்கிடையே சைதாப்பேட்டையில் அதிமுகவினர் முறைகேடுகளில் ஈடுபட்டதால் அங்கு மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி திமுக சார்பில் பொன்முடி மனு கொடுத்தார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கியைநேரில் சந்தித்த பொன்முடி இந்த மனுவைக் கொடுத்தார்.
Comments
Story first published: Friday, May 31, 2002, 5:30 [IST]