சுருளி அருவியில் வெள்ளம்: முன் கூட்டியே சீசன்
தேனி:
தேனி அருகே உள்ள சுருளி அருவியில் இந்த ஆண்டு முன் கூட்டியே சீசன் தொடங்கிவிட்டது. அந்த அருவியில்வெள்ளம் போல் தண்ணீர் கொட்டுவதால் மக்கள் வெள்ளம் வந்து குவிய ஆரம்பித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ளது சுருளி நீர்வீழ்ச்சி. இங்கு வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தான் சீசன்தொடங்கும்.
ஆனால் சமீபத்தில் தமிழகத்தில் நல்ல மழை பெய்ததையடுத்து, இங்கு ஒரு வாரம் முன்னதாகவே சீசன்தொடங்கிவிட்டது. இதனால் சுருளி அருவியில் குளிக்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
அக்கம்பக்கத்தில் உள்ள ஊர்களிலிருந்து மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து மக்கள் வந்து,மகிழ்ச்சியுடன் அருவியில் நீராடிச் செல்கின்றனர்.
மேலும் இங்கு சீசன் நேரத்தில் மலர் மற்றும் பழக்கண்காட்சிகள் நடத்தப்படும். அடுத்த சில நாட்களில் இந்தக்கண்காட்சிகள் துவங்கும் என்று தெரிகிறது.
இந்த சீசனை ஒட்டி ரூ.12 லட்சம் செலவில் சுருளியை வளர்ச்சியடைந்த சுற்றுலா தலமாக மாற்ற மாவட்டநிர்வாகிகள் முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.