For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்கராச்சாரியாருக்கு மீண்டும் கொலை மிரட்டல்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

காஞ்சி சங்கராச்சாரியாருக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அவரது பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டுள்ளது. மத்திய அரசின்கோரிக்கையை ஏற்று அயோத்தி விவகாரத்தில் அவர் தலையிட்டார். இதையடுத்து அவருக்கு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டது.

காஞ்சி மடத்திற்கும், அவர் செல்லும் இடங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.மடத்துக்கு வரும் அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிடப்படுகின்றனர்.

இதற்கிடையே சமீபத்தில் தஞ்சாவூரில் வைத்து அவரைக் கொலை செய்யப் போவதாக மிரட்டல் வந்தது.தொலைபேசியில் பேசிய நபர் சங்கராச்சாரியார் தஞ்சாவூர் வரும்போது அங்கு வைத்து கொலை செய்யப்போவதாக மிரட்டினார். இத்ை தொடர்ந்து தஞ்சாவூரில் அவருக்கு மிக பலத்த பாதுகாப்பு தரப்பட்டது.

இப்போது காஞ்சிபுரம் திரும்பிவிட்ட அவருக்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X