For Daily Alerts
Just In
தாமரைக்கனி வீட்டுக்கு குடிநீர் கட்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவும் ஜெயலலிதாவின் இன்னாள் கடும் எதிரியுமான தாமரைக்கனியின் வீட்டில் இருந்த குடிநீர் குழாய் இணைப்புகள்துண்டிக்கப்பட்டன.
இதனால், அவரது வீட்டினர் சைக்கிளில் குடத்தை கட்டி ஆட்களை அனுப்பி வருகின்றனர்.
தாமரைக்கனி தனது வீட்டுக்கு 3 குடிநீர் இணைப்புகள் பெற்றிருந்தார். இவை அனைத்தும் முறைகேடாக பெறப்பட்டவையாம் (இப்போ தான் தெரிந்ததா?).
இதையடுத்து இந்த 3 குடிநீர் குழாய் இணைப்புகளையும் அதிகாரிகள் துண்டித்துவிட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் புகார் தந்ததாகவும் அதன் அடிப்படையில் விசாரணை நடத்தித் தான் நகராட்சிஅதிகாரிகளுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத்தின் தலைவராக இருப்பவரே தாமரைக்கனி தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Wednesday, June 12, 2002, 5:30 [IST]