தனி மனிதனை விட நாடு தான் பெரியது: கலாம் அறிக்கை
சென்னை:
தனி மனிதர்களை விட நாட்டின் நலன் மிக முக்கியமானது என்று ஜனாதிபதியாகவுள்ள விஞ்ஞானி அப்துல் கலாம்கூறியுள்ளார்.
தன்னை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தியுள்ளதையடுத்து நாட்டு மக்களுக்கு அவர் ஒரு விடுத்துள்ள செய்தியில்,
தேசத்தின் ஒட்டு மொத்த நம்பிக்கையின் அடையாளம் தான் ஜனாதிபதி பதவி. அந்தப் பதவிக்கு என் மீதுநம்பிக்கை வைத்து என்னை நிறுத்தியுள்ள நாட்டின் அரசியல் கட்சிகளுக்கும், தேசத்துக்கும் நான் நன்றிதெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த திங்கள்கிழமையில் இருந்து தொலைபேசி அழைப்புகள், இ-மெயில்கள் என வாழ்த்து மழையில் மூழ்கிக்கிடக்கிறேன். இது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. உண்மையில் என்ன சொல்வது என்றே எனக்குத்தெரியவில்லை.
இன்டர்நெட்டிலும் பத்திரிக்கைகள் சார்பிலும் தேசத்துக்கு உங்கள் செய்தி என்ன என்று கேட்டுக் கொண்டேஇருக்கிறார்கள். நான் என்ன செய்தியை மக்களுக்குச் சொல்வது என்று புரியவில்லை.
எனக்கு கீதையில் கிருஷ்ணர் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.எது நடக்கிறதோ அதுவும் நல்லதே நடக்கிறது. எது நடக்குமோ அதுவும் நல்லதாகவே நடக்கும்.
பள்ளிக் குழந்தைகளுடன் எனக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான அனுபவத்தை இங்கே சுட்டிக் காட்டுவது நல்லது என்றுநினைக்கிறேன். போர்பந்தரில் 3,000 பள்ளிக் குழந்தைகள் மத்தியில் நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது10ம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவி தைரியமாய் எழுந்தாள்.
என்னிடம் சார், எங்களைப் போன்றவர்களுக்கு என்ன செய்தியைச் சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டாள்அந்த மாணவி.
நான் சொன்னேன், என் அருமை குழந்தைகளே.. எந்த ஒரு தனி மனிதனையும் விட தேசம் தான் பெரியது, தேசம்தான் மிக முக்கியமானது என்ற நினைப்பை வேத மந்திரமாக மனதில் நிறுத்திக் கொண்டு வளருங்கள். இது தான்எனது செய்தி என்று கூறினேன்.
இன்றும் அது தான் என் மக்களுக்கு நான் சொல்லும் செய்தி என்று கூறியுள்ளார் அப்துல் கலாம்.