கலாமை எதிர்த்து வீராங்கனை லட்சுமி செகல் போட்டி
டெல்லி:
ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் கேப்டன் லட்சுமி சேகல்நிறுத்தப்பட்டுள்ளார்.
இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தேசிய ராணுவத்தில் பணியாற்றிய வீராங்கனையாவார். 88 வயதான லட்சுமி1938ம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரியில் டாக்டருக்குப் படித்தார்.
மிகுந்த தேசப் பற்று காரணமாக நேதாஜியின் ராணுவத்தில் சேர்ந்து ராணி ஜான்சி படைப் பிரிவை தலைமை தாங்கிநடத்தினார். தேசிய ராணுவ மருத்துவப் பிரிவிலும் பணியாற்றினார்.
இவருக்கு முன்னாள் பிரதமர்களான வி.பி.சிங், தேவெ கெளடாவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
போட்டியிட நான் தயார் என்றும் லட்சுமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக தங்கள் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,பார்வர்ட் பிளாக் கட்சிகள் இன்று கூட்டாக ஆலோசனை நடத்தின.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ஏ.என். அகமதி அல்லது முன்னாள் தமிழக ஆளுநர் பாத்திமா பீவிஆகியோரில் ஒருவரை நிறுத்த இந்தக் கட்சிகள் திட்டமிட்டன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின்ஆதரவைப் பெறவும் திட்டமிட்டிருந்தன.
ஆனால், காங்கிரஸ் கட்சியும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சியும் அப்துல் கலாமுக்கு ஆதரவுதெரிவித்துவிட்டன. இதையடுத்து முலாயம் சிங் யாதவை தங்கள் கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள்நீக்கன.
இதையடுத்து இப்போது தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரையே கலாமுக்கு எதிராக நிறுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள்முடிவு செய்தன. சில இடதுசாரித் தலைவர்கள் பாத்திமா பீவியை நிறுத்தலாம் என்றும் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து தங்கள் வேட்பாளரை தேர்ந்தெடுக்க இக் கட்சிகளின் கூட்டுக் கூட்டம் டெல்லியில் இன்றுகாலை தொடங்கியது.
இக் கூட்டத்தில் லட்சுமியை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அப்துல் கலாமின் வெற்றி நிச்சயமாகிவிட்டபோதிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தங்களது எதிர்பைக்காட்டும் வகையில் வேட்பாளரை நிறுத்த அக் கட்சிகள் நிறுத்தியுள்ளன.