கலாம் பெரும் வெற்றி பெறுவார்: அத்வானி
அகமதாபாத்:
இடதுசாரிக் கட்சிகளும் ஆதரித்தால் அப்துல் கலாமை அடுத்த ஜனாதிபதியாக ஒருமனதாக தேர்ந்தெடுத்துவிடலாம்என உள்துறை அமைச்சர் அத்வானி கூறினார்.
குஜராத்தில் மீண்டும் ஆங்காங்கே வன்முறை வெடிக்க ஆரம்பித்துள்ளது. இது குறித்து நேரில் ஆராய அத்வானிஇன்று அகமதாபாத் சென்றார். முதல்வர் மோடி, பா.ஜ.க. தலைவர்கள், உயர் அதிகாரிகளுடன் தனித்தனியே அவர்ஆலோசனை நடத்தினர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
இடதுசாரிகள் மட்டும் ஆதரித்தால் அப்துல் கலாம் மிகப் பெரிய வெற்றி அடைவார். தேசிய ஜனநாயகக் கூட்டணிமட்டுமின்று சமாஜ்வாடிக் கட்சி, காங்கிரசும் ஆதரிப்பதால் பெரும் வெற்றி அவருக்குக் கிடைக்கும் என்றார்.
போட்டியை தவிர்க்க மதிமுக கோரிக்கை:
குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் போட்டியைத் தவிர்க்க வேண்டும் என மதிமுக பொருளாளரும் மத்தியஅமைச்சருமான கண்ணப்பன் கூறினார்.
கோவையில் நிருபர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கூட அவரை ஏற்றுக் கொண்டுவிட்டது. இதனால்கம்யூனிஸ்ட்களும் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.