வெளிநாட்டு இந்தியர்களுக்கு கலாம் புகழாரம்
சென்னை:
ஜனாதிபதி தேர்தலில் தன்னை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் போட்டியிடும் லட்சுமி செகல் மிகவும்மதிப்புக்குரிய பெண்மணி என அப்துல் கலாம் கூறினார்.
பிரதமர் வாஜ்பாயின் சார்பில் தன்னைச் சந்திக்க வந்த மத்திய அமைச்சர் விஜய் கோயலிடம் கலாம் இவ்வாறுகூறினார்.
இது குறித்து கோயல் கூறுகையில், லட்சுமி செகல் உங்களை எதிர்த்து போட்டியிடுவது குறித்து என்னநினைக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் எந்தப் பதவிக்கும்போட்டியிடலாம், என்னை எதிர்த்து நிற்கும் லட்சுமி செகலை நான் மிகவும் மதிக்கிறேன். தேச விடுதலைக்காகபாடுபட்ட மிகவும் மதிப்புக்குரிய பெண்மணி அவர் என்று பதில் தந்தார் என்றார்.
உலகம் முழுவதும் இருந்தும் இந்தியர்கள் இ-மெயில்களை அனுப்பி வருகின்றனர். பிற நாடுகளில் வசிக்கும்இந்தியர்கள் தங்கள் நாடு குறித்து மிகவும் பெருமையுடன் உள்ளனர். நாட்டுக்காக எதையும் செய்ய அந்தஇந்தியர்கள் தயாராக இருப்பதைத் தான் எனக்கு வரும் இ-மெயில்கள் உணர்த்துகின்றன என்றும் கோயலிடம்கலாம் தெரிவித்தார்.
இதனை கோயல் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறினார்.