For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கண்ணகி சிலை: தமிழறிஞர் மா.நன்னன் வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மெரீனா கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில்வைக்க வேண்டும் என்று கோரி தமிழறிஞர் மா.நன்னன் தாக்கல் செய்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில்விசாரணைக்கு வந்தது.

நன்னன் உள்பட 4 பேர் கண்ணகி சிலை தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். இன்று நன்னனின் மனுவிசாரணைக்கு வந்தது.

தனது மனுவில் நன்னன் கூறியிருப்பதாவது:

மெரீனா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையை தேவையில்லாமல் அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டனர்.கடந்த 1968ம் ஆண்டு இந்த சிலை அங்கு நிறுவப்பட்டது. அதனால் யாருக்கும் எந்த இடைஞ்சலும் ஏற்படவில்லை.ஆனால், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக இப்போது அரசு கூறுகிறது.

எம்.ஜி.ஆர்., ராஜிவ் காந்தி ஆகியோரின் சிலைகளும் முக்கியமான சாலைகளில் தான் வைக்கப்பட்டுள்ளன.இதனால் யாருக்கும் எந்த இடைஞ்சலும் ஏற்படவில்லை.

கண்ணகி சிலையையும் மீண்டும் மெரீனா கடற்கரையில் வைப்பதால் யாருக்கும் இடையூறு வராது. ஆனால்,சிலையை மீண்டும் வைக்க அமைக்கப்பட்ட கமிட்டி கல்லூரி உள்பட 6 இடங்களை அரசுக்கு பரிந்துரைசெய்துள்ளது.

இதனால் அந்தக் கமிட்டி மீதே சந்தேகம் எழுகிறது. அரசுக்கு ஆதரவாக அந்தக் கமிட்டி செயல்படுவதாகத் தான்நினைக்கத் தோன்றுகிறது. சிலையை மீண்டும் பழைய இடத்திலேயே வைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்என்று கூறியுள்ளார் நன்னன்.

இந்த வழக்கை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி முருகேசன் அடங்கிய டிவிசன் பெஞ்ச்விசாரித்தது. வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X