மதப் பள்ளிகளுக்கு பாகிஸ்தான் புதிய கட்டுப்பாடு
இஸ்லாமாபாத்:
மதரஸாக்கள் எனப்படும் மதப் பள்ளிகள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது.
தீவிரவாதிகளை உருவாக்குவதில் இந்த மதப் பள்ளிகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற இந்தப் பள்ளிகளுக்கு பாகிஸ்தான் அரசு நேற்று தடை விதித்தது. பதிவுசெய்யப்படாத மதரஸாக்கள் உடனடியாக மூடப்படும் என்றும், அரசின் நிதி உதவியைப் பெற வேண்டுமானால்மதக் கல்வியுடன் ஆங்கிலம், அறிவியல் உள்ளிட்ட மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவும் கல்வியையும் போதிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மதரஸாக்களில் வெளிநாட்டினர் சேர்ந்து படிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரவு-செலவுகளைஒழுங்காக பராமரிக்க வேண்டும் எனவும், ஆண்டுதோறும் அரசிடம் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது.
முதலில் நூற்றுக்கணக்கான மதப் பள்ளிகளுக்கு அரசின் உதவி நிதியை பாகிஸ்தான் நிறுத்தியிருந்தது. இப்போதுஇந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என பாகிஸ்தானுககு உலக அளவில் கடும்நெருக்குதல் தரப்பட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தீவிரம்:
இந்தியாவின் போர் மிரட்டலையடுத்து பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின் நெருக்கடி பல மடங்குஅதிகரித்துள்ளது. தீவிரவாதிகளை தடுக்காவிட்டால் உலக வங்கியின் நிதி உதவியை நிறுத்துவோம் எனஅமெரிக்கா எச்சரித்துள்ளது.
தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துவதை அமெரிக்கா நேரடியாகக் கண்காணிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்துக்கு தர இருந்த போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்களையும் இப்போதைக்குத் தரமுடியாது என அமெரிக்கா கூறிவிட்டது.
ஆப்கானிஸ்தான் எல்லையைக் கண்காணிக்க இந்த விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் அமெரிக்காஇலவசமாக தரவுள்ளது. இவற்றின் மதிப்பு 73 மில்லியன் டாலர்களாகும். ஆனால், தீவிரவாதிகளை ஒடுக்குவதைபாகிஸ்தான் முழு அளவில் செயல்படுத்தினால் தான் இந்த உதவி கிடைக்கும் என்று கூறப்பட்டுவிட்டது.