ஸ்டாலின் படம் அகற்றம், கொடி இறக்கம்
சென்னை:
மு.க.ஸ்டாலினிடமிருந்து மேயர் பதவி பறிக்கப்பட்டவுடனேயே சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஸ்டாலின் சம்பந்தமான அனைத்துஅடையாளங்களும் அகற்றப்பட்டு விட்டன.
மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டடத்தில் மேயர் கொடி பறந்து கொண்டிருக்கும். மேயர் ஊரில் இல்லாதபோது அந்தக்கொடி கீழிறக்கப்பட்டு விடும். ஸ்டாலின் பதவி பறிக்கப்பட்டவுடனேயே கொடி கீழிறக்கப்பட்டு விட்டது.
அதேபோல அலுவலகத்தில் இருந்த ஸ்டாலின் படங்களும் உடனடியாக அகற்றப்பட்டு விட்டன. மாநகராட்சி நிகழ்ச்சிகளில் ஸ்டாலின்பங்கேற்ற காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் அகற்றப்பட்டு துணை மேயர் கராத்தே தியாகராஜன் தனியாக கலந்து கொண்டபுகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல ஸ்டாலினின் அலுவலகத்தில் இருந்த நடிகர் ரஜினிகாந்த கொடுத்த திருவள்ளுவர் சிலை, வள்ளுவர் கோட்ட சிலை மற்றும் பிறநினைவுப் பரிசுகள் ஸ்டாலின் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டிடன.
மொத்தத்தில் இனிமேல் ஸ்டாலின் சம்பந்தமான எந்த நினைவும் மாநகராட்சி அலுவலகத்தில் இருக்கக் கூடாது என்ற ரீதியில் தான்புதன்கிழமை முழுவதும் மாநகராட்சியின் செயல்பாடுகள் இருந்தன.