For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோபால் தொடர்ந்த வழக்கு: ஜெயலலிதா, தேவாரத்திற்கு கோர்ட் நோட்டீஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி நக்கீரன் கோபால் தாக்கல் செய்த ரிட் மனுவை ஏற்ற சென்னைஉயர்நீதிமன்றம் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிரடிப் படையின் தலைவர் வால்டேர் தேவாரம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டது.

நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், காட்டுக்குள் சென்று ராஜ்குமாரை மீட்பதற்கு தமிழகஅரசு தனக்கு கொடுத்திருந்த உறுதிமொழியை மீறக் கூடாது என்று உத்தரவிடக் கோரியும் நக்கீரன் கோபால், சென்னை உயர்நீதிமன்றத்தில்மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவில்,

கடந்த 2000மாவது ஆண்டு ஜூலை 30ம் தேதி ராஜ்குமார் கடத்திச் செல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரை மீட்டு வரக் கோரியும்,வீரப்பனுடன் சமாதானப் பேச்சு நடத்துமாறும் அப்போதைய தமிழக முதல்வர் (கருணாநிதி) சார்பில் எனக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதை ஏற்று அரசுத் தூதராக போக நான் ஒப்புக் கொண்டேன். ஆனால் பின்னால் ஏதாவது பிரச்சினைகள் வரும் என்பதை எதிர்பார்த்து, 10நிபந்தனைகளை விதித்தேன். எழுத்துப் பூர்வமாக கர்நாடக மற்றும் தமிழக அரசுகளிடமிருந்து உறுதிமொழியைப் பெற்ற பிறகே காட்டுக்குள்போனேன்.

ஆனால், இப்போது என்னையே இந்த வழக்கில் சேர்த்து அரசு கொடுமை செய்ய ஆரம்பித்துள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக முழுஉண்மைகள் வெளி வர வேண்டுமானால் கடத்தல் வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார் கோபால்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கனகராஜ் மனுவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இது உடனடியாக விசாரணைக்கு ஏற்கப்படுகிறதுஎன்று அறிவித்தார்.

இந்த மனு குறித்து நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா, அதிரடிப் படையின் தலைவரும் முன்னாள்டிஜிபியமான வால்டேர் தேவாரம், தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு தனித் தனி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X