For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்துக்கு தண்ணீர் விட முடியாது: கர்நாடகம்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் விட முடியாது என கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூறினார்.

பா.ம.க. எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள குழுவை சந்தித்த பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,

கிருஷ்ணராஜ சாகர் அணையில் 73 அடி தான் தண்ணீர் உள்ளது. இது எங்களுக்கே போதாது.

ஆனால், எங்களுக்கு நெருக்குதல் தர வேண்டும் என்பதற்காகத் தான் இந்த விஷயத்தில் வழக்குத் தொடரப்போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழகத்துக்குத் தண்ணீர் விட வேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால், கர்நாடதத்தில் போதிய அளவு மழைஇல்லை. இதனால் ஜூன் 16ம் தேதிக்குப் பின்னர் நீரை தமிழத்துக்கு தரவிலலை.

சட்டப்படி தமிழகத்துக்கு தர வேண்டிய பங்கை கர்நாடகம் தந்து தான் ஆக வேண்டும். ஆனால், மழை அளவைப்பொறுத்துத் தான் செய்ய முடியும். இந்த முறை கர்நாடகத்தில் சரியாக மழை பெய்யவில்லை.

இதனால் எங்கள் அணைகளிலேயே போதிய அளவு தணணீர் இல்லை. தண்ணீர் கேட்டு மாண்டியா, மைசூர்மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் நாங்களே என்ன செய்வது என்றுதெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறோம்.

காவிரி ஆணையத்தில் இருந்து தமிழகம் விலகியிருக்க வேண்டாம். ஆனால், விலகுவதாக அவர்கள் கொள்வதாககூறியுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம் என்றார் கிருஷ்ணா.

அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடுவது தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவு குறித்து முழுவிவரம் தெரியும் முன் கருத்துத் தெரிவிக்க நான் விரும்பவில்லை. தமிழக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட இந்தமுடிவு குறித்த விவரத்தை எனது பாசனத்துறை செயலாளரிடம் கேட்டுள்ளேன் என்றார்.

இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பேசுவீர்களா என்று கேட்டபோது, அப்படி ஏதும்என்னிடம் திட்டமில்லை என்றார்.

தமிழக விவசாயிகள் எச்சரிக்கை:

இதற்கிடையே காவிரியில் தண்ணீர் கிடைக்க தமிழக அரசு வழி செய்யாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்போவதாக காவிரிப் பாசன விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

இதற்காக வரும் ஜூலை 1ம் தேதி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டம் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில்போராட்டத்துக்கான நாள் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் தமிழகஇதுவரை சந்தித்திராத மிகப் பெரிய போராட்டமாக இருக்கும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.

இதனால் தஞ்சை, நாகப்பட்டிணம், திருவாரூர் மாவட்ட நிர்வாகங்கள் பெரும் கவலையடுத்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X