For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அண்ணாவுக்கு கவிதையை சமர்ப்பணம் செய்யும் வாஜ்பாய்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழில் மொழி பெயர்க்கப்படவுள்ள தன்னுடைய கவிதைத் தொகுப்பை தன்னுடைய நண்பரும் முன்னாள் தமிழகமுதல்வருமான அண்ணாதுரைக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் வாஜ்பாய் தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் எழுதியுள்ள கவிதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன.

இந்தியில் எழுதப்பட்டுள்ள இந்தக் கவிதைகளை திட்டக் கமிஷன் உறுப்பினரான வெங்கடசுப்ரமணியம் தமிழில்மொழி பெயர்த்துள்ளார்.

"வாஜ்பாய் 31" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கவிதைத் தொகுப்பு விரைவில் புத்தகமாகவெளியிடப்படவுள்ளது.

இந்தத் தொகுப்பை முன்னாள் தமிழக முதல்வரும் திமுகவின் நிறுவனருமான அண்ணாதுரைக்கு அர்ப்பணிப்பதாகவாஜ்பாய் தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் அண்ணா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஜனதா கட்சி சார்பில் எம்.பியாக இருந்தவர்வாஜ்பாய். அண்ணாவின் ஆங்கில உரைகள் அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே மிகப் பிரபலமாகஇருந்தன.

அப்போது அண்ணாவுடன் மிக நெருக்கமாக இருந்தார் வாஜ்பாய்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X