கர்நாடம் பொய் சொல்கிறது: ஜெயலலிதா
சென்னை:
கர்நாடக அரசு தனது விவசாயப் பாசனப் பகுதியை திட்டமிட்டு, அளவுக்கு மீறி அதிகரித்துவிட்டு தமிழகத்துக்குதண்ணீர் தர மறுக்கிறது என முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் தனது பாசனப் பகுதிகளுக்கு திருப்பி விட்டு வருகிறது.தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டியது பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் தனது பாசனப் பகுதியை கர்நாடகம்விரிவாக்கி வருகிறது.
தமிழகத்துக்கு தண்ணீர் தரக் கூடாது என்பதற்காகவே கர்நாடகம் திட்டமிட்டு இந்த விரிவாக்கத்தைச் செய்தது.
இதனால், இப்போது எவ்வளவு தண்ணீர் இருந்தாலும் அதை தங்களது பாசனப் பகுதிக்கே பயன்படுத்திவிட்டுதமிழகத்தை ஏமாற்றி வருகிறார்கள்.
இப்போது கர்நாடக அணைக்கட்டுகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. அதை தங்கள் கோடைகாலத்துக்காக ரிசர்வ் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க மழை பெய்யவில்லை, இதனால்தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியவில்லை என்று கர்நாடகம் பொய் சொல்வதை ஏற்க முடியாது.
தங்களது அணைக்கட்டுகளின் உயரத்தையும் கர்நாடகம் தொடர்ந்து உயர்த்தி வந்துள்ளது. இதனால், எவ்வளவுதண்ணீர் வந்தாலும் அதை சேமித்து வைத்துக் கொண்டு தமிழகத்துடன் விளையாடி வருகிறார்கள்.
தமிழகத்தின் பங்கு நீரையும் சேமித்து வைத்துக் கொண்டு கோடை கால பயிர் விளைச்சலையும் கர்நாடகம்அமோகமாக நடத்தி வருகிறது. ஆனால், தமிழகம் தனது குறுகிய கால பயிர்களுக்குக் கூட தண்ணீர் இல்லாமல்தவித்து வருகிறது.
காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு உரிய பங்கு நீரை கர்நாடகம் தர மறுக்கிறது. இதுஆணையத்தை கர்நாடகம் மதிக்கவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.
இதைத் தட்டிக் கேட்க வேண்டிய ஆணையம் வாய்மூடி மெளனமாய் உட்காந்திருக்கிறது. இதனால் அந்தஆணையத்தின் கூட்டத்தில் கலந்து கொள்வது தமிழகத்துக்கு எந்தப் பலனையும் தரப் போவதில்லை.
கர்நாடக அணைக் கட்டுகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளது ஆணையத்துக்கும் தெரியும். ஆனால், அதில்தமிழகத்தின் பங்கை வாங்கித் தர அவர்களால் முடியவில்லை.
நிலைமை இப்படி இருக்க மழை பெய்யவில்லை, இதனால் தண்ணீர் தர முடியவில்லை என்று தொடர்ந்துபொய்யான தகவல்களைச் சொல்லி தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு கர்நாடகம் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.