அயோத்தி: காஞ்சி சங்கராச்சாரியார் டெல்லி சென்றார்
சென்னை:
அயோத்தி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள் இன்று காலை டெல்லி சென்றார்.
நேபாள மன்னரின் அழைப்பை ஏற்று நேபாளத் தூதரகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
பின்னர் டெல்லியில் பல இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுடன் அயோத்தி விவகாரம் குறித்துப் பேசுகிறார்.கடந்த மார்ச் மாதம் இந்தப் பேச்சுவார்த்தைகளை அவர் துவக்கினார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்துக்கு அருகில் உள்ள சர்ச்சைக்குள்ளாகாத நிலத்தில் கோவில்கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய சட்ட வாரியத்திடம் அவர் பேசி அதை ஒப்புக் கொள்ளவைத்தார்.
நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன் பிரச்சனைக்குரிய இடம் குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்றார்.
இந்த பார்முலாவின் அடிப்படையில் தான் மீண்டும் இப்போது பேச்சு நடத்த உள்ளார் சங்கராச்சாரியார்.
ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு எதிராக இருந்தால் அதை ஏற்க மாட்டோம் என விஸ்வ ஹிந்து பரிஷத்நேற்று அறிவித்தது. நீதிமன்றம் மூலம் இந்தப் பிரச்சனையை தீர்க்க முடியாது என அறிவித்துள்ளது.
இந் நிலையில் மீண்டும் பேச்சு வார்த்தையை தொடங்கவுள்ளார் சங்கராச்சாரியார்.
சங்கராச்சாரியாருக்கு வீரமணி எதிர்ப்பு:
தனக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் அயோத்தி விவகாரத்தில் சங்கராச்சாரியார் தலையிட்டுவருகிறார் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இவர் ஆர்.எஸ்.எஸ்சின் தீவிரமான ஆதரவாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். இவர் எப்படி இந்தவிவகாரத்துக்கு தீர்வு காண முடியும். ஆனால், தனக்கு சுய விளம்பரம் கிடைக்கும் என்பதால் அவர் இதில் அமைதித்தூதராக நடந்து கொள்வதாகக் காடடிக் கொள்கிறார்.
இவர் சொல்லும் தீர்வை விஸ்வ ஹிந்து பரிஷத் கேட்கப் போகிறதா?
இவர் எடுக்கும் முடிவுக்கு நாட்டின் பிற சங்கராச்சாரியார்கள் ஒப்புதல் அளித்துள்ளார்களா? என்று கேள்விஎழுப்பியுள்ளார்.அயோத்தி விவகாரத்தில் வி.எச்.பி. அந்தர் பல்டி