For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சாவூரில் ஜெயலலிதா: வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய விவசாயிகள்

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

இன்று முதல்வர் ஜெயலலிதா தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார்.

காவிரியில் நீர் பெற்றுத் தர ஜெயலலிதா தவறிவிட்டதாகக் கூறி திமுக விவசாய அணியினரும் பிற விவசாயஅமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றியுள்ளனர். கருப்பு பேட்ஜ் அணிந்துஅவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

தஞ்சாவூரில் கட்டப்பட்டுள்ள தென்னக பண்பாட்டு மையத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைக்க ஜெயலலிதாஅங்கு சென்றார். சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் தஞ்சாவூர் சென்றார்.

காவிரியில் தண்ணீர் விட கர்நாடகம் மறுத்துவிட்ட நிலையில் குறுவை நெல் கருகிப் போய் இந்த மாவட்டவிவசாயிகள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் வேலை தேடி அண்டைமாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இந் நிலையில் ஜெயலலிதா அங்கு சென்றுள்ளார். அங்கு தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர் மாவட்டகலெக்டர்கள், தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர், விவசாயத்துறை, பாசனத்துறை, பொதுப்பணித்துறைசெயலாலர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்துகிறார்.

தங்களுடனும் ஜெயலலிதா ஆலோசனை நடத்த வேண்டும் என விவசாய அமைப்புகள் கோரியுள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏதாவது உதவித் திட்டத்தை ஜெயலலிதா அறிவிப்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி ஆணையத்தை புறக்கணிப்பது சரியே: நெடுமாறன், வீரமணி

கர்நாடம் பொய் சொல்கிறது: ஜெயலலிதா

ஜெ. செய்வது சரியல்ல- கருணாநிதி

நீர் தேடும் காவிரி

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X