பொறியியல் கல்லூரி கல்விக் கட்டணம் கடும் உயர்வு
சென்னை:
தமிழக பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணத்தை தமிழக அரசு கடுமையாகஉயர்த்தியுள்ளது.
பி.ஈ. ப்ரீ சீட் கட்டணத்தில் ரூ.2,450ம் பேமண்ட் சீட் கட்டணத்தில் ரூ.2,550ம் உயர்ந்துள்ளது.
இதன்படி சுயநிதிப் (Self Financing) பி.ஈ., பி.டெக்., எம்.ஈ., எம்.டெக். மற்றும் எம்.சி.ஏ. ஆகிய படிப்புகளுக்கானப்ரீ சீட் கட்டணம் ரூ.15,250 ஆகவும் பேமெண்ட் சீட் கட்டணம் ரூ.49,750 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் படிப்புக் கட்டணம் ரூ.8,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் தரமான பொறியியல் கல்லூரிகள் 20 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் விதிமுறைப்படி இந்தப் புதிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.வரும் 2004-05 கல்வியாண்டு வரை இந்தப் புதிய கட்டணம் அமலில் இருக்கும்.
இந்நிலையில் ஏற்கனவே பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக்குகளில் படித்துக் கொண்டிருக்கும்மாணவ-மாணவியரின் கல்விக் கட்டணத்தில் எந்தவிதமான மாறுதலும் இல்லை என்றும் பழைய கட்டணத்தையேஅவர்கள் தொடர்ந்து செலுத்தலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான இ. பாலகுருசாமி மற்றும்தொழில்நுட்பக் கல்வி இயக்குநரான என்.ஏ. ஞானம் ஆகியோர் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.