ஒரே ஆண்டில் 2 டிகிரிகள்: மதுரை பல்கலையில் அறிமுகம்
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு ஒரே நேரத்தில் இரு டிகிரிகளைப் பெறுவதற்கான வசதிஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப் படிப்புகளைப் படித்து 2 டிகிரிகளைப் பெறும் முறையை பல்கலைக்கழகநிதிக் குழுமமும் (யு.ஜி.சி.) இதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.
இதற்காகப் பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவி அளிக்கும் யு.ஜி.சியின் அனுமதியை இந்தப் பல்கலைக்கழகம்ஏற்கனவே கோரியிருந்தது.
ஒரே நேரத்தில் இரு டிகிரிகள் பெறும் முறையை வரவேற்றுள்ள யு.ஜி.சி. விரைவில் இதற்கான அனுமதியைவழங்கப் போவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திடம் கூறியுள்ளது.
மேலும் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாமல் ஒரே நேரத்தில் கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறுஇரு டிகிரிகளைப் பெறுவதற்கும் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.
இதைத் தவிர கல்லூரிகளுக்கும் அவை சார்ந்து இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான தொடர்புகளைவலுவாக்குவதற்காக பல்வேறு வகையான வசதிகளையும் யு.ஜி.சி. விரைவில் வழங்கவுள்ளது.
மேலும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் பிறநிறுவனங்களுக்கும் கூட அதிகமான நிதியுதவியை ஒதுக்கவும் யு.ஜி.சி. முடிவெடுத்துள்ளது.