பிரதமர், அத்வானிக்கு ஜெ. புகார் கடிதம்
சென்னை:
விடுதலைப்புலிகளை ஆதரித்து வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப் போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக துணைப் பிரதமர் அத்வானிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதன் நகலை பிரதமர்வாஜ்பாய்க்கும் அனுப்பியுள்ளார்.
மதுரை அருகே திருமங்கலத்தில் கடந்த ஜூன் 29ம் தேதி நடந்த ஒரு கூட்டத்தில் புலிகளுக்கு ஆதரவாகப்பேசியதாக வைகோ மீது குற்றம் சாட்டியுள்ள ஜெயலலிதா, அந்தக் கூட்டத்தில் வைகோ பேசிய பேச்சு குறித்தவீடியோ கேசட்டையும் அத்வானிக்கு அனுப்பியுள்ளார்.
அத்வானிக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது:
வைகோவின் வன்முறையைத் தூண்டும் இந்த ஆவேசப் பேச்சுக்களைக் கடுமையாக இரும்புக்கரம் கொண்டுஅடக்கவில்லை என்றால், நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள "சிமி", "அல்-கொய்தா" ஆகிய தீவிரவாதஅமைப்புகளும் உற்சாகமடைந்து விடுவார்கள்.
பொடா சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் ஓட்டுப் போட்ட வைகோ இப்போது அந்தச் சட்டத்தை எதிர்ப்பதுமுரணாக உள்ளது.
வைகோவின் பேச்சு சந்தேகத்திற்கே இடமில்லாமல் சட்டவிரோத செயலாகும். இதனால் அவர் மீது பொடா மற்றும்1967ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
இதுதொடர்பாக வைகோ மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர எனது அரசுக்கு வேறு வழியில்லை. தொடர்ந்துவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ செயல்பட்டு வருகிறார். சட்டத்தை மதிக்காமல் அவர் நடந்துவருகிறார்.
இதுபோன்ற சட்டவிரோதப் பேச்சுக்களில், செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டுள்ள தலைவர்களுடன் உறவுவைத்திருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல. வைகோ போன்றதலைவர்களை ஆரம்பத்திலேயே தட்டி வைப்பதே நல்லது.
வைகோவின் தொடர்ந்த இந்தப் பேச்சுக்களைப் புறக்கணித்தால் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தமிழகஅரசும் மத்திய அரசும் எடுத்து வரும் நடவடிக்கைகளும் முயற்சிகளும் கேலிக் கூத்தாக ஆகிவிடும் என்று தனதுகடிதத்தில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
-->