For Daily Alerts
Just In
பாமகவினர் கொலை மிரட்டல் தொடர்கிறது: சிவகாமி புகார்
சென்னை:
தனித்து செயல்படப் போவதாக அறிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலித் எம்.எல்.ஏவான சிவகாமிவின்சென்ட் தனக்கு தொலைபேசி மூலம் பாமகவினர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாக சென்னைபோலீஸ் கமிஷனரிடம் நேரில் புகார் கொடுத்தார்.
இன்று (வியாழக்கிழமை) சென்னை போலீஸ் கமிஷனர் விஜயக்குமாரை நேரில் சந்தித்து புகார் கொடுத்த பின்னர்செய்தியாளர்களிடம் சிவகாமி பேசுகையில்,
தனித்து செயல் படப்போவதாக நான் அறிவித்த பிறகு எனக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.இருப்பினும் தொடர்ந்து தொலைபேசி மூலம் பாமகவினர் கொலை மிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளனர்.
இதுதொடர்பாக கமிஷனரிடம் நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளேன். கூடுதல் பாதுகாப்புகொடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார் சிவகாமி.
-->
Comments
Story first published: Thursday, July 4, 2002, 5:30 [IST]