For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குறைகளை அறிய பயணிகளுடன் பயணம் செய்வேன்: மூர்த்தி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ரயில் பயணிகளின் குறைகளை நேரில் கண்டறிவதற்காக ரயில்களில் பயணிகளுடன் பயணம் செய்யப் போவதாகமத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கூறினார்.

மத்திய அமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக இன்று (வியாழக்கிழமை) காலை அவர் சென்னை வந்தார்.விமான நிலையத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி, பாமக தொண்டர்கள், ரயில்வே அதிகாரிகள் ஆகியோர் அவரைவரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மூர்த்தி பேசுகையில்,

பல்வேறு பிரிவு ரயில்வே மண்டலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். ரயில் பயணிகளின் குறைகளைநேரில் கண்டறிவதற்காக ரயிலில் பயணிகளுடன் பயணம் செய்து அவர்களது குறைகளை கேட்கவுள்ளேன்.

ரயில் பயணிகளின் குறைகளைக் களைவதே எனது முதல் பணி. அதுமட்டுமல்லாது, தமிழகத்தில் தேங்கிக் கிடக்குமபல்வேறு ரயில்வேத் திட்டங்களை விரைவுபடுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றார் மூர்த்தி.

இதற்கிடையே இன்று மாலை சென்னை (சென்ட்ரல்) - விசாகப்பட்டினம் இடையிலான வாராந்தர எக்ஸ்பிரஸ்ரயிலை மூர்த்தி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்த ரயில் சென்னையிலிருந்து விசாகப்பட்டினத்திற்குஒவ்வொரு வியாழக்கிழமையும், அங்கிருந்து சென்னைக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இயக்கப்படவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X