For Quick Alerts
For Daily Alerts
Just In
சிறை அதிகாரிகளுக்கு வந்த மிரட்டல் தந்தி
கோயம்புத்தூர்:
உங்கள் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால் மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று கோவைமத்திய சிறைச்சாலை போலீசாருக்கு மிரட்டல் தந்தியும் கடிதமும் வந்துள்ளது.
இந்தச் சிறையில் தான் கோவை தொடர் குண்டுவெடிப்பில் கைதான மதானி உள்ளிட்ட அல்-உம்மா தீவிரவாதிகள்அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு அல்- உம்மா தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும், பிற கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்படுவதுவழக்கம்.
இந் நிலையில் கடந்த 1ம் தேதி ஒரு மிரட்டல் கடிதம் சிறை அதிகாரிகளுக்கு வந்தது. அதில், உங்கள் செயல்களைமாற்றிக் கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் விரும்பத் தகாத விளைவுகள் ஏற்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே 3ம் தேதி ஒரு தந்தி வந்தது. அதிலும்,போன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகசிறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்
Comments
Story first published: Friday, July 5, 2002, 5:30 [IST]