For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையிலிருந்து கள்ளத் தோணியில் வந்த வாலிபர் கைது

By Staff
Google Oneindia Tamil News

பவானிசாகர்:

இலங்கையிலிருந்து கள்ளத் தோணி மூலம் வந்த ஒரு வாலிபர் பவானிசாகரில் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே புஞ்சை புளியம்பட்டியில் ஒரு பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி ஒருவாலிபர் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாகப் போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்தனர். போலீசாரைப் பார்த்ததும் அந்த வாலிபர்ஓட முயற்சித்தார். ஆனால் உடனடியாக போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபரின் பெயர் சிவகணபதி என்ற தம்பியா (27) என்றும்இலங்கையின் மன்னார் மாவட்டம் வாமதேவபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

அவர் பாஸ்போர், விசா எதுவும் இல்லாமல் கள்ளத் தோணி மூலம் தமிழகத்திற்குள் வந்துள்ளார் என்பதுடன்ஏற்கனவே தனுஷ்கோடி போலீசாரிடம் பிடிபட்டு பின்னர் அங்கிருந்து தப்பி வந்துள்ளார் என்ற விவரமும் தெரியவந்தது.

இதையடுத்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சிவகணபதி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்கநீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிவகணபதி குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X