For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோ விவகாரம்: கடலோர காவற்படை தீவிர கண்காணிப்பு

By Staff
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிராக பொடா சட்டத்தின் கீழ் வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளதைத்தொடர்ந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகத் தொடர்ந்து வைகோ பேசி வருவதையடுத்து அவர் உள்பட 9 பேர் மீது தமிழகஅரசு பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து வரும் 12ம் தேதி இந்தியா திரும்பியவுடன் வைகோவைக் கைது செய்ய தமிழக அரசு தனிப்போலீஸ் படைகளையும் ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கிடையே இந்த விவகாரத்தையொட்டி இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் புலிகள் நுழைந்து ஏதாவதுஅசம்பாவித சம்பவங்களில் ஈடுபடலாம் என்று தமிழக அரசு கருதுகிறது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் புலிகள் ஊடுருவுவதற்கு வாய்ப்புள்ள ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும்நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் கடலோரக் காவற்படையினர் கண்காணிப்பைத்தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதிகளில் உள்ள செக் போஸ்டுகளில் கூடுதலாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களையும் போலீசார் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X