கருணாநிதி கைது: மனித உரிமைக் கமிஷன் வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்
டெல்லி:
கருணாநிதி கைது, குஜராத் மதக் கலவரம் ஆகிய விவகாரங்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைக் கமிஷனில்தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தனது விசாரணையில் எடுத்துக் கொண்டுள்ளது.
உடனே இந்த வழக்குகள் குறித்த விவரங்களை அனுப்பி வைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்துக்கும்அகமதாபாத் உயர் நீதிமன்றத்துக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கருணாநிதி கைது செய்யப்பட்டபோது தேசிய மனித உரிமைக் கமிஷன் அதிமுக அரசைக் கடுமையாகக்கண்டித்தது. மாநில அரசுக்கு சில உத்தரவுகளையும் பிறப்பித்தது. ஆனால், அதை மாநில அரசு ஏற்கவில்லை.இதையடுத்து மாநில அரசுக்கு எதிராக தேசிய மனித உரிமைக் கமிஷனில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதே போல குஜராத் மதக் கலவரத்தின்போது தேசிய மனித உரிமைக் கமிஷன் சொன்ன பரிந்துரைகளை அம்மாநில அரசு ஏற்கவில்லை. இதையடுத்து குஜராத் மாநில அரசு மீது மனித உரிமைக் கமிஷனில் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டது.
மனித உரிமைக் கமிஷன் விசாரித்து வரும் இந்த இரு வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் தனது விசாரணையில்எடுத்துக் கொண்டுள்ளது. சட்டச் சிக்கல் நிறைந்திருப்பதால் இந்த இரு வழக்குகளையும் உடனடியாக உச்சநீதிமன்றத்துக்கு மாற்றுமாறு இரு மாநில உயர் நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கிரிபால், நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதி அர்ஜித் பசாயாஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அதை தங்கள் விசாரணைக்கு மாற்றிக் கொண்டனர்.