கொள்ளையர்களை பிடிக்க முயன்றவர்கள் மீது வெங்காய வெடி வீச்சு
தாராபுரம்:
தாராபுரத்தில் தலைமை ஆசிரியரின் வீட்டில் கொள்ளையடித்தவர்களை பிடிக்கச் சென்ற வாலிபர்கள் மீது வெங்காயவெடியை வீசி விட்டு அந்தக் கொள்ளையர்கள் தப்பிவிட்டனர்.
ஈரோடு மாவட்டம் தாராபுரம் கண்ணன் தெருவைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் கிராமப் பள்ளியில் தலைமைஆசிரியயையாக உள்ளார். ஒரு விஷேச நிகழ்ச்சிக்காக இவர் நேற்று வீட்டைப் பூட்டிவிட்டு பவானி நகருக்குச்சென்றார்.
நேற்று இவரது வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு நுழைந்த இரு கொள்ளையர்கள் பீரோவையும் உடைத்து 15பவுன் தங்க நகை, 10 பட்டுப் புடவைகள், ரூ. 5000 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பினர்.
அடுத்தாக அருகில் பூட்டப்பட்டிருந்த மின் வாரிய ஊழியர் ஒருவரின் வீட்டை உடைத்துக் கொண்டு உள்ளேநுழைந்தனர். அங்கு ஏதும் கிடைக்காததால் அந்த வீட்டின் மாடியில் இருந்த வங்கி ஊழியரின் வீட்டுக் கதவைஉடைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இரு வாலிபர்கள் கொள்ளையர்களைப் பார்த்ததும் சந்தேகமடைந்தனர்.அவர்களை நோக்கி இருவரும் சென்றபோது, கொள்ளையர்கள் தப்பியோட ஆரம்பித்தனர்.
இருவரும் அவர்களை விரட்டிச் சென்றபோது கொள்ளையர்கள் வெங்காய வெடிகளை வீசிவிட்டுத்தப்பியோடிவிட்டனர்.