For Daily Alerts
Just In
வைகோ கைது: கருத்து தெரிவிக்க அத்வானி மறுப்பு
டெல்லி:
வைகோவின் கைது குறித்து மத்திய அரசு கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமானஅத்வானி கூறினார்.
டெல்லியில் இன்று நிருபர்களைச் சந்தித்த அத்வானியிடம் இது குறித்துக் கேட்டபோது, தமிழகம் தொடர்பாகவோ. வைகோ கைதுதொடர்பாகவோ மத்திய அரசின் சார்பில் கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் எங்கள் கட்சி ஏற்கனவே தனதுநிலையை அறிவித்துவிட்டது என்றார்.
இந்தக் கைதுக்கு எதிராக பா.ஜ.க. நடவடிக்கை எடுக்கும் என கட்சியின் தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு வேறு வழிகளில் தமிழக அரசுடன் பேசி வருவதாகத் தெரிகிறது. முன்னதாக அவரைக் கைது செய்யவேண்டாம் என உள்துறை அமைச்சகத்திடம் இருந்து தமிழக அரசுக்கு அதிகாரப்பூர்வமில்லாத வழிகளில் கோரிக்கை வைக்கப்பட்டது.ஆனால், அதை தமிழக அரசு ஏற்கவில்லை.
-->
Comments
Story first published: Saturday, July 13, 2002, 5:30 [IST]