திமுக தொண்டர்களுக்கு கராத்தே பயிற்சி துவக்கம்
சென்னை:
திமுகவினருக்கு தற்காப்புக் கலையான கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை திமுக தலைவர் கருணாநிதி அறிமுகப்படுத்திவைத்தார்.
இதுவரை ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளில் தான் தற்காப்புக் கலைகள் சொல்லித் தரப்பட்டன.
தமிழகத்தில் ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர். ஒருமுறை அதிமுக தொண்டர்கள் தங்களை திமுகவினரிடம் இருந்து காத்துக் கொள்ள துப்பாக்கிவைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால், திமுகவில் இது போன்ற பேச்சுக்களோ அல்லது பயிற்சிகளோ தரப்பட்டதில்லை. இப்போது முதல்முறையாக தனதுதொண்டர்களுக்கு கராத்தே பயிற்சி அளிக்க திமுக தலைவர் கருணாநிதி திட்டமிட்டுள்ளார்.
இதற்கான முதல் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. அண்ணா அறிவாலயத்தில் இந்தத் திட்டத்தை திமுக தலைவர் கருணாநிதி துவக்கிவைத்தார்.
இதற்குப் போட்டியாக அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா குங்ஃபூ பயிற்சியைத் துவக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.