அயோத்தி விவகாரம்: காஞ்சி சுவாமிகளுடன் வி.எச்.பி. தலைவர் சந்திப்பு
காஞ்சிபுரம்:
அயோத்தி பிரச்சனை தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின்சர்வதேசத் தலைவர் அசோக் சிங்கல் நேரில் சந்தித்துப் பேசினார்.
காஞ்சி மடத்தில் இச் சந்திப்பு நடந்தது. முன்னதாக ராமநாபுரம் சென்ற சுவாமிகள் அங்கு தெற்குக் காட்டூரில் ரூ. 200 கோடியில்அமைக்கப்பட உள்ள தனியார் மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், அயோத்தி விவகாரத்தில் சுமூகத் தீர்வு ஏற்பட இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தவும் நீதிமன்றத்தீர்ப்பை மதித்து நடக்கவும் முன் வர வேண்டும் என்றார்.
மேலும் காவிரிப் பிரச்சனை குறித்து கருத்துத் தெரிவித்த சங்கராச்சாரியார், நன்றாக மழை பெய்யும்போது எந்தப் பிரச்சனையும்வருவதில்லை. மழை குறையும்போது பிரச்சனை வருகிறது. இந்த விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் பேசி சுமூகத் தீர்வு காணவேண்டும்.
தமிழக அரசு மாநிலத்தில் நீர் ஆதாரங்களை (water resources) பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.