வேனில் வைகோவுக்கு உணவு தரவில்லை: வக்கீல்கள் புகார்-- - ஓ.பி. மறுப்பு
வேலூர்:
சென்னையில் இருந்து மதுரை சிறைக்கும், மதுரை சிறையில் இருந்து வேலூர் சிறைக்கும் கொண்டு செல்லப்பட்டபோதுவைகோவுக்கு போலீசார் உணவு தரவில்லை என்று கூறப்படுகிறது..
வைகோவை சென்னையில் இருந்து இரவில் மதுரை சிறைக்கு வேனில் கொண்டு சென்றபோதும், மதுரை சிறையில் இருந்துவேலூருக்கு மறுநாள் பகலிலும் இழுத்தடித்தபோதும் அவருக்கு போலீசார் உணவும் தண்ணீரும் தரவில்லை என்று வைகோவின்வழக்கறிஞர் கூறியுள்ளார்.
சென்னையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டபோது அவருக்கு உளுந்தூர்பேட்டையில் உணவு தரப்பட்டதகாக முன்னதாகபோலீசார் கூறினர். ஆனால், உணவு தரப்படவில்லை என வைகோ தனது வழக்கறிஞரிடம் கூறியுள்ளார்.
அதுவும் கூட நாங்கள் திரும்பத் திரும்பக் கேட்டபோது தான் அதை வைகோ எங்களிடம் சொன்னார் என வழக்கறிஞர்கள்கூறியுள்ளனர். அவரிடம் உணவு குறித்து கேட்டபோது, முதலில் போலீசாரைக் காட்டிக் கொடுக்க விரும்பாமல் அமைதியாகஇருந்தார். நாங்கள் சந்தேகப்பட்டு திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கேட்டபோது தான் உணவு தராததைச் சொன்னார் எனவைகோவின் வழக்கறிஞர்கள் கூறினர்.
ஆனால், உணவு தரப்பட்டதாக சிறைத்துறையை கவனிக்கும் பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்ச்ெலவம் கூறியுள்ளார்.இன்று இது குறித்து ஓ.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையில் இருந்து மதுரைக்கும் மதுரையில் இருந்து வேலூருக்கும் அழைத்துச் செல்லப்பட்டபோது வைகோவுக்கு உணவுதரப்படவில்லை என்று சொல்வது பொய்யான செய்தி.
சென்னையில் இருந்து மதுரை சென்ற போது உளுந்தூர்பேட்டையில் உணவு தரப்பட்டது. மதுரையில் இருந்து வேலூர் கொண்டுசெல்லப்பட்டபோது திருச்சியில் காலை உணவு தரப்பட்டது.
2.30 மணிக்கு வழியில் மதிய உணவு தரப்பட்டது. ஆனால், அதை அவர் உண்ண மறுத்துவிட்டார். சிறை உணவே போதும், அதைசிறையில் போயே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார் என்று ஓ.பி. கூறியுள்ளார்.
வைகோவுக்கு பேன் தரப்படாத விவகாரத்திலும் ஓ.பி தான் அறிக்கை விட்டார். உணவு விஷயத்திலும் அவர் இன்னொருஅறிக்கை வெளியிட்டுள்ளார்.