For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகூர்: கிரேன் உடைந்து விழுந்து 3 பேர் உடல் நசுங்கி சாவு

By Staff
Google Oneindia Tamil News

நாகூர்:

நாகூர் அருகே கடற்கரையோரம் எண்ணெய் நிறுவனத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் அதன் மீது ஏறி நின்றுவேலை செய்து கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் உடல் நசுங்கி இறந்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரு எண்ணெய் நிறுவனத்தில்கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.

இன்று காலை ஐந்து தொழிலாளர்கள் ஒரு பிரம்மாண்டமான தூணின் அடிப்பகுதியில் சில ரிப்பேர் வேலைகளைச்செய்வதற்காக கிரேன் மூலம் மேலே சென்றனர்.

உயரமான கிரேனின் நுனிப் பகுதியில் அவர்கள் ஐந்து பேரும் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் அந்தத் தூணின் அடிப்பகுதிக்குச் செல்வதற்கு முன்பாகவே திடீரென்று கிரேனின் ஒரு பகுதிஉடைந்து கீழே விழுந்தது.

இதையடுத்து கிரேனின் நுனிப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஐந்து தொழிலாளர்களும் உடைந்து போனகிரேனுடன் மிக உயரத்தில் இருந்து கீழே விழுந்தனர்.

முதலில் அவர்கள் தரையில் விழ, பின்னால் தொடர்ந்து வந்த கிரேன் அவர்கள் ஐந்து பேரின் மேலும் விழுந்தது.இதில் மூன்று பேர் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிரேனை இயக்கிக் கொண்டிருந்த இரண்டுஆபரேட்டர்கள் பயந்துபோய் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டனர்.

காயமடைந்த இரண்டு தொழிலாளர்களும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது தொடர்பாக மூன்று மேற்பார்வையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X