காஞ்சி சங்கராச்சாரியாரின் 68வது ஜெயந்தி விழா
காஞ்சிபுரம்:
காஞ்சி ஸ்ரீஜெயேந்திர சுவாமிகளின் 68வது ஜெயந்தி விழா கொண்டாட்டங்கள் இன்று தொடங்கின.
இதையொட்டி ஸ்ரீஜெயேந்திர சுவாமிகளும் ஸ்ரீவிஜயேந்திர சுவாமிகளும் இன்று காலை காஞ்சிபுரத்திலுள்ளபுகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு 130 தங்க நாணயங்களுடன் "கனகாபிஷேகம்"செய்தனர்.
பின்னர் அம்மனுக்கு தினமும் அபிஷேகம் செய்வதற்குப் பயன்படுவதற்காக 660 கிராம் எடை கொண்ட ஒரு தங்கக்குடத்தையும் அந்தக் கோவிலுக்கு ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் பரிசாக அளித்தார்.
அந்தக் கோவிலில் உள்ள லட்சுமி மற்றும் சரஸ்வதி சிலைகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளியிலான கிரீடம்சூட்டப்பட்டது. பின்னர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குச் சென்ற காஞ்சி சுவாமிகள் அங்கு கடவுளை வழிபட்டார்.
காஞ்சி சுவாமிகளின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சங்கர பக்த ஜனசபா சார்பில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தஹோம நிகழ்ச்சிகளும் "சகஸ்ரகலச அபிஷேக" நிகழ்ச்சிகளும் இன்று காலை முடிவடைந்தன.
ஜெயலலிதா நாளை காஞ்சி வருகை:
இதற்கிடையே நாளை காஞ்சிபுரம் வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றுவிட்டு பின்னர் காஞ்சி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெறவுள்ளார் என்று காஞ்சிபுரம் மடத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான பன்னீர்செல்வம், இந்துஅறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி, மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சுபாஷ் மஹாரியாஆகியோர் இன்று காஞ்சிபுரம் மடத்திற்குச் சென்று சுவாமிகளிடம் ஆசி பெற்றனர்.