For Daily Alerts
Just In
மாரடைப்பால் கிருஷ்ணகாந்த் மரணம்
டெல்லி:
துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75.
காலை அவருக்கு திடீரென பயங்கர நெஞ்சு வலி ஏற்பட்டது. வலி பொறுக்க முடியாமல் துடித்த அவரை உடனடியாக அகில இந்தியமருத்துவக் கவுன்சில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு 7.38 மணிக்கு அவர் அனுமதிக்கப்பட்டார்.
உடனடியாக இருதய நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 8.45 மணிக்கு அவர் இறந்தார். இந்தத்தகவல் அறிந்தவுடன் துணைப் பிரதமர் அத்வானி அங்கு விரைந்தார்.
அவருக்கு ஏற்கனவே இருதய பிரச்சனை இருந்து வந்தது.
1997ம் ஆண்டு ஆகஸ்டில் அவர் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார்.
-->
Comments
thatstamil abdul kalam narayanan parliament tamilnadu tamil news vice president mourning sworn krishna kanth swearing
Story first published: Saturday, July 27, 2002, 5:30 [IST]