லாரி மேல் உட்கார்ந்திருந்த 2 பேர் பாலத்தில் மோதி பலி
சென்னை:
சென்னையில் லாரியின் மேற்பகுதியில் அமர்ந்து பயணம் செய்த 2 சுமை தூக்கும் தொழிலாளர்கள் சுரங்கப்பாலத்தில் மோதி பலியாயினர்.
சரக்கு லாரிகளில் ஏற்றப்பட்ட சரக்குகளுடன் சில சமயம் சுமை தூக்கும் தொழிலாளர்களும் அந்த லாரியின்மேலேயே அமர்ந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.
அசோக், சேகர் மற்றும் ராமலிங்கம் ஆகிய மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் அந்த லாரியின் மேற்பகுதியில்சரக்குகளுக்கு மேலே உட்கார்ந்து கொண்டிருந்தனர்.
அண்ணா சாலையில் உள்ள ஒரு சுரங்கப் பாலத்தில் அந்த லாரி சென்ற போது அந்தப் பாலத்தின் சுவரில் இந்தமூன்று தொழிலாளர்களுக் சிக்கி நசுங்கி விட்டனர்.
இவர்களில் அசோக்கும் சேகரும் சம்பவம் நடந்த இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.ராமலிங்கம் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து யானைக்கவுனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.