For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலேசிய நிதியுதவித் திட்டங்கள்: ஜெ -டத்தோ சாமிவேலு சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் புதிய நிர்வாக நகரம் அமைப்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவதுஆகியவை குறித்து முதல்வர் ஜெயலலிதாவை மலேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ சாமிவேலு நேரில் சந்தித்துப் பேசினார்.

இப்போது கோட்டையில் இயங்கி வரும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தையும் சட்டமன்றத்தையும் மகாபலிபுரம் சாலையில்அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிர்வாக நகரத்தை மலேசிய தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவிடன் அமைக்கத்திட்டமிட்டுள்ளது.

அதே போல குளச்சல் துறைமுகமும் மலேசிய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்தப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தம்ஏற்கனவே கையெழுத்தாகியுள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் இந்தப் பணிகள் தொடங்கவுள்ளன.

இந்தத் திட்டப் பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்த டத்தோ சாமிவேலு அதிகாரிகள் குழுவினருடன் இன்றுசென்னை வந்தார். கோட்டையில் இந்தக் குழிவினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் அதிகாரிகளையும் சந்தித்து இந்தப் பணிகள்குறித்து ஆலோசனை நடத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X