For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பசி கொடுமையில் தமிழக நெசவாளர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான கைத்தறிநெசவாளர்களின் பசியைப் போக்குவதற்காக பொது மக்கள் "கஞ்சித் தொட்டிகள்" வைத்து வருகின்றனர்.

இலவச வேஷ்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு நிறுத்தி விட்டதைத் தொடர்ந்து தமிழகம்முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான நெசவாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில்ஆயிரக்கணக்கான மக்கள் கைத்தறி நெசவைத் தான் நம்பித் தான் வாழ்க்கையே நடத்தி வருகின்றனர்.

கைத்தறிகள் மூலம் நெய்யப்படும் வேஷ்டி மற்றும் சேலைகளை அருகில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் கொடுத்துஅதில் கிடைக்கும் கூலிப் பணத்தில் வயிறு கழுவி வருகின்றனர் இந்த ஏழைகள்.

இவர்கள் நெய்யும் லட்சக்கணக்கான வேஷ்டிகள் மற்றும் சேலைகளை தமிழக அரசே மாநிலத்தின் பல்வேறுபகுதிகளிலும் விற்பனை செய்து வந்தது.

"வாழ்ந்த" நெசவாளர்கள்:

இந்நிலையில் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தின் போது ஏழை-எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி, சேலைஅளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பண்டிகை காலங்களில் ஏழைகளுக்கு வேஷ்டிகளும் சேலைகளும்தமிழக அரசால் அளிக்கப்பட்டு வந்தன.

இதையடுத்து நெசவாளர்களுக்கும் தொடர்ந்து வேலைவாய்ப்பு இருந்து கொண்டே இருந்தது. சொந்தமாகக்கைத்தறிகள் வைத்திருந்தவர்கள் எல்லாம் பெரும் செல்வந்தர்களாக மாறினார்கள்.

கைத்தறிக் கூலித் தொழிலாளர்களும் பசியின்றி வாழ்ந்து வந்தனர்.

சாகும் தொழிலாளர்கள்:

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகக் கைத்தறி நெசவுத் தொழில் மிகவும் மோசமான நிலையை அடைந்துவந்தது. நவநாகரீக ஆடைகளின் போட்டியை சமாளிக்க முடியாத இந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை நசிவடையதொடங்கியது. ஆனால், மாநில அரசின் ஏழைகளுக்கு வேஷ்டி-சேலை வழங்கும் திட்டம் அமலில் இருந்ததால்இவர்கள் நெய்யும் ஆடைகளை அரசு வாங்கி வந்தது.

இலவச வேஷ்டி-சேலை நிறுத்தம்:

இந் நிலையில் தான் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி தமிழக அரசு கடந்த ஆண்டு இலவச வேஷ்டி-சேலைவழங்கும் திட்டத்தைத் திடீரென்று முழுவதுமாக நிறுத்தியது.

தமிழக அரசின் இந்த அதிரடி முடிவு கைத்தறி நெசவுத் தொழிலாளர்களை நேரடியாகப் பாதித்தது. கடந்த இரண்டுவாரங்களாகத் தான் இந்த முடிவு தமிழக கைத்தறி நெசவுத் தொழிலாளர்களைக் கடுமையாகப் பாதிக்கஆரம்பித்துள்ளது.

மேலும் நெசவாளர்களுக்காக அரசே நேரடியாக அளித்து வந்த குறைந்த விலையிலான நூல் விற்பனையையும்அரசு நிறுத்தி விட்டது.

நெசவாளர்கள் போராட்டம்:

தங்களுடைய நெசவுத் தொழிலைத் தொடர்ந்து செய்யவோ அல்லது அதற்கு மாற்று வேலைவாய்ப்புக்களைஅளிக்கவோ கோரி ஸ்ரீவில்லிவுத்தூரில் கடந்த 10 நாட்களுக்கு முன் நெசவாளர்கள் பிரம்மாண்டமானஉண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இந்த ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 5,000 நெசவாளர்கள் கலந்து கொண்டனர். இதற்காகஸ்ரீவில்லிபுத்தூர் தேரடித் தெருவில் சுமார் அரை கி.மீ. நீளத்திற்குப் பந்தல் போடப்பட்டிருந்தது.

இந்தப் பந்தலும் போதாமல் கொளுத்தும் வெயிலிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டனர்.

ஆனால், அரசின் காது செவிடானதால் ஏதும் நடக்கவில்லை. இதனால், அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்னசெய்வது என்று தெரியாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பெரும் கொடுமையான நிலையை அடைந்துள்ளன.

உருவானது "கஞ்சித் தொட்டி":

இந்த நிலையில் தான் வறுமையால் வாடும் நெசவாளர்களுக்காக "கஞ்சித் தொட்டி" வைக்கும் திட்டம்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒரு கிராமத்தில் ஏற்படுத்தப்பட்டது.

நெசவாளர்களே நேரடியாகச் சென்று சில செல்வந்தர்களிடம் கையேந்தி நிற்கும் நிலை தான் இது. ஓரளவிற்குவசதியானவர்கள் தரும் பணத்தை வைத்து தாங்கள் வசிக்கும் தெருவின் ஒரு மூலையில் நெசவாளர்களே கஞ்சியைசமைக்கின்றனர்.

இதற்காக கல்யாண மண்டபங்களில் சமையலுக்குப் பயன்படுத்தப்படுவதைப் போன்ற ஒரு பெரிய பாத்திரத்தில்கஞ்சி சமைக்கப்படும்.

பின்னர் ஒவ்பொரு வீட்டில் இருந்தும் ஒருவர் வந்து வரிசையாக நின்று ஒரு சிறிய தூக்குவாளியில் கஞ்சியைப்பெற்றுச் செல்ல வேண்டும். ஒருவருடைய ஒரு நாள் சாப்பாடு இவ்வளவு தான்.

பல நல்ல உள்ளம் படைத்த மக்களால் இந்தக் "கஞ்சித் தொட்டிகள்" இப்போது பல இடங்களிலும்வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமில்லாமல் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவில் மற்றும் எட்டயபுரம்பகுதிகளிலும் தற்போது கஞ்சித் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தினமும் இந்தக் "கஞ்சித் தொட்டி"யிலிருந்து கிடைக்கும் கஞ்சியைத்தான் சாப்பிட்டு பசியைப் போக்கி வருகின்றனர்.

இந்த எண்ணிக்கை விரைவில் லட்சத்தையும் தாண்டும். ஆனால், அத்தனை பேருக்கு "கஞ்சித் தொட்டி" வைத்துஉணவு அளிக்கும் சக்தி கிராம மக்களுக்கு இல்லை.

கருணாநிதி உத்தரவு:

கஞ்சித் தொட்டிகள் வைத்து மக்களுக்கு உணவுக் கஞ்சி வழங்கி உயிர்களைக் காக்குமாறு திமுக நிர்வாகிகளுக்குஅக் கட்சியின் தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

கருணாநிதியின் ஈகை குணம் - ஜெ. தாக்கு:

எச்சிக் கையால் கூட காக்கையை ஓட்டாத ஈகை குணம் படைத்த கருணாநிதி தற்போது தமிழக நெசவாளர்களுக்காககஞ்சித் தொட்டிகள் திறக்கவுள்ளதாகக் கூறியுள்ளது நகைப்புக்குரியது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.

இந்தக் கஞ்சித் தொட்டிகளைக் கூட திமுகவின் தலைமை நிலையத்திலிருந்தோ அல்லது திமுக தலைவர் என்றமுறையில் தம்மாலோ திறக்கப்படும் என்று கூறாமல் திமுக கட்சி உறுப்பினர்களால் திறக்கப்படும் என்று கருணாநிதிகூறியுள்ளது இவ்விஷயத்தில் அவர் எந்த அளவுக்கு பரந்த மனப்பான்மை கொண்டுள்ளார் என்பதையேகாட்டுகிறது என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கைத்தறி நெசவாளர்களின் துயர் துடைக்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கவே கருணாநிதி இந்நடவடிக்கையை அவசர கதியில் எடுத்துள்ளதாகவும் ஜெயலலிதாகுற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக அரசு ரூ.25 கோடி ஒதுக்கீடு:

இதற்கிடையே இலவச வேஷ்டி-சேலை திட்டத்திற்காகத் தேங்கிக் கிடக்கும் சேலைகளையும் வேஷ்டிகளையும்கொள்முதல் செய்வதற்காக தமிழக அரசு ரூ.25 கோடியை ஒதுக்கியுள்ளது.

சென்னையில் இன்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வேஷ்டிகளும் சேலைகளும் வயதுமுதிர்ந்த ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் 25,000க்கும் அதிகமான நெசவாளர்களுக்குஉடனடியாக தலா 20 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X