சென்னையில் பட்டப் பகலில் வீடு புகுந்து ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை
சென்னை:
சென்னையில் பட்டப் பகலிலேயே வீட்டுக்குள் புகுந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தைக்கொள்ளையடித்துச் சென்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்த கொள்ளைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும்பீதியைக் கிளப்பியுள்ளன. இவை அனைத்தும் பெரும்பாலும் நள்ளிரவு நேரத்திலேயே நடந்து வந்தன.
ஆனால் சென்னை-கோடம்பாக்கத்தில் நேற்று பட்டப் பகலிலேயே ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் கட்டடத்தில் குடியிருப்பவர் நடேசன். ஜவுளி வியாபாரியான இவர்நேற்று காலை வீட்டைப் பூட்டிவிட்டு தன் குடும்பத்தினருடன் வெளியே சென்று விட்டார்.
பின்னர் மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து நடேசன்குடும்பத்தினர் அதிர்ந்தனர்.
இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ளபணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
கொள்ளையர்கள் பட்டப் பகலிலேயே வந்து கொள்ளையடித்துச் சென்றது பக்கத்து வீட்டுக் காரர்களுக்குக் கூடதெரியாமல் போயிற்று.
இந்தச் சம்பவம் குறித்து கோடம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.