பட்டினியால் 6 நெசவாளர்கள் சாவு
மதுரை:
விருதுநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் நெசவாளர்கள் சிலர் பட்டினியால் இறந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 6 நெசவாளர்கள்பட்டினியால் செத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை அரசு உறுதிப்படுத்தவில்லை.
தமிழகத்தில் நெசவாளர்களின் நிலைமை மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மதுரையைசுற்றியுள்ள மாவட்டங்களில் கிட்டத்தட்ட 50,000 நெசவாளர் குடும்பங்கள் சாப்பாடுக்குக் கூட வழியில்லாமல் 7 மாதங்களாகவேவறுமையில் வாடி வருவதாகத் தெரியவந்துள்ளது.
பல நெசவாளர்களுக்கு கூலியைக் கூட தராமல் கூட்டுறவு சங்கங்கள் இழுத்தடித்து வருகின்றன. ஆனால், இவர்கள் நெய்த துணிகளை விற்கமுடியாததால் தான் அவர்களுக்கு கூலி தர முடியவில்லை என கூட்டுறவு சங்கங்கள் கூறியுள்ளன.
பட்டினிச் சாவுகளைக் கண்டு கலங்கியிருக்கும் அந்தப் பகுதி தொழிலதிபர்களும் பொது மக்களும் கஞ்சித் தொட்டிகளைஅமைத்துள்ளனர். ராஜபாளையம், சங்கரன்கோவில், எட்டையபுரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின்தென் மாவட்டங்களிலும் ஈரோடு போன்ற மாவட்டங்களிலும் கிராமப் பகுதிகளில் நிலைமை மிக மோசமாகஉள்ளது.