For Daily Alerts
Just In
ஜெயலலிதாவை தரக்குறைவாகப் பேசியதாக தாமரைக்கனி மீது வழக்கு
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பொதுக் கூட்டத்தில் தரக்குறைவாகப் பேசியதற்காக முன்னாள் எம்.எல்.ஏ.தாமரைக்கனி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தி. நகரில் உள்ள தாமஸ் ரோட்டில் திமுக சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தப் பொதுக் கூட்டத்தில் திமுக இளைஞரணித் தலைவர் ஸ்டாலின், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் அதிமுகஎம்.எல்.ஏவான தாமரைக்கனி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் தாமரைக்கனி பேசிய போது ஜெயலலிதாவை அவர் மிகவும் தரக்குறைவாகவும் அவதூறாகவும்பேசியதாக மாம்பலம் போலீசாரிடம் புகார் கூறப்பட்டது.
அதன்படி இது தொடர்பாக தாமரைக்கனி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Friday, May 24, 2002, 5:30 [IST]