For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோ, நெடுமாறன் கைதை எதிர்த்து கைதிகள் உண்ணாவிரதம்

By Staff
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துகோவை சிறையில் 26 கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்தவர்கள். வீரப்பனுடன் இணைந்து நடிகர் ராஜ்குமாரை கடத்தியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் இந்தப் படைக்கு முதல்வர் ஜெயலலிதாவின பரிந்துரையின்பேரில் மத்திய அரசு தடைவிதித்தது.

இன்று காலை வழக்கமாக உணவு பரிமாறப்பட்டபோது இந்த 26 கைதிகளும் அதைப் பெற மறுத்துவிட்டனர். சிறை அதிகாரிகளிடம் இந்தக்கைதிகள் 26 பேரும் கையெழுத்திட்டு ஒரு கடிதம் தந்ததனர்.

அந்தக் கடிதத்தில், பொடா சட்டத்தை தமிழக அரசு மிகத் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. மக்களின் பேச்சு சுதந்திரமும் கருத்துச்சுதந்திரமும் பறிக்கப்பட்டு வருகிறது. வைகோவும் பழ.நெடுமாறனும் கைது செய்யப்பட்டது மாநில அரசின் அடக்குமுறையைத் தான்காட்டுகிறது.

இந்த இரு தலைவர்களின் கைதையும் எதிர்த்து இன்று நாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்று எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து சிறை அதிகாரிகள் இந்தக் கைதிகளுடன் சென்று பேச்சு நடத்தினர். போராட்டத்தைக் கைவிடுமாறு மிரட்டியும் பின்னர்கோரிக்கை விடுத்தும் பார்த்தனர். ஆனால், அதை ஏற்க இவர்கள் மறுத்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து இவர்கள் அடைக்கப்பட்டுள்ள செல்லுக்கு கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. மருத்துவர்களும் தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X