குளு குளு குற்றாலத்தில் இன்று சாரல் விழா
குற்றாலம்:
சீசன் களை கட்டியிருப்பதால் குளு குளு குற்றாலத்தில் சனிக்கிழமை சாரல் விழா தொடங்குகிறது.
குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க சீசன் உச்சகட்டத்தை எட்டியுள்ள நேரத்தில் சாரல் விழாநடத்துவது தமிழக சுற்றுலாத் துறையின் வழக்கமாகும்.
அதன்படி தற்போது குற்றாலத்தில் சீசன் களை கட்டியிருப்பதாலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைஅதிகரித்துக் கொண்டே இருப்பதாலும், சாரல் விழா நடத்தப்படவுள்ளது.
வருகிற 10ம் தேதி வரை மொத்தம் 8 நாட்களுக்கு இந்த சாரல் விழா நடைபெறுகிறது. இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், சமையல் போட்டி, படகுப் போட்டி, கோலப் போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதில் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொள்கின்றனர்.
சாரல் விழாவை சபாநாயகர் காளிமுத்து சனிக்கிழமை மாலை தொடங்கி வைக்கிறார். அமைச்சர்கள் நைனார்நாகேந்திரன், கருப்பசாமி, மில்லர் ஆகியோரும் இதில் கலந்து கொள்கிறார்கள்.
தற்போது அனைத்து அருவிகளிலும் நன்றாக தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குற்றாலகுளியலை சந்தோஷமாக அனுபவித்து வருகிறார்கள்.