For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணகிக்காக இன்று தடையை மீறி உண்ணாவிரதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை இருந்த இடத்திலேயே மீண்டும் சிலையை நிறுவ வலியுறுத்தி,போலீஸ் தடையையும் மீறி உண்ணாவிரதம் இருக்க பல்வேறு தமிழ் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

கண்ணகி சிலையை எடுத்த இடத்திலேயே மீண்டும் வைக்க வேண்டும் என்று கோரி கண்ணகி சிலை இருந்தஇடத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், திராவிட ஆன்மீக இயக்கம்,பாரதிதாசன் இலக்கிய பேரவை, தலைநகர் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகள் அறிவித்திருந்தன.

ஆனால் உண்ணாவிரதத்திற்கு போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை.

இருப்பினும் வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக இந்த அமைப்புகளின்நிறுவனர்கள் மற்றும் அமைப்பாளர்கள் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபடும் இவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X