இது கருத்துரிமை போர்: வீரபாண்டியன்
சென்னை:
தமிழகம் கருத்துரிமைப் போர்க் களத்தில் நின்று கொண்டிருக்கிறது என தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன்கூறினார்.
இந்த இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் நடத்துவது குறித்து தமிழ்ஆர்வலர்கள், ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோனையில் அவர் ஈடுபட்டுள்ளார்.
நெடுமாறன் கைது குறித்து விவாதிக்க நாளை தமிழர் தேசிய இயக்கத்தின் நிர்வாகக் குழு அவசரமாகக் கூடுகிறது. முன்னதாக நிருபர்களிடம்பேசிய வீரபாண்டியன்,
தமிழகம் இன்று கருத்துரிமைப் போர்க் களத்தில் நின்று கொண்டிருக்கிறது. பொடா சட்டத்தின் கீழ் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதைமிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் எங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்கள் பாதையில் இருந்து விலகி ஓட மாட்டோம்.
எங்கள் கொள்கைளை விட்டுவிட்டு அஞ்சி ஒதுங்க மாட்டோம். நெடுமாறனின் கைதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஜனநாயகரீதியில்போராட்டம் நடத்துவது குறித்து நாளை நடக்கும் எங்கள் இயக்கத்தின கூட்டத்தில் முடிவெடுப்போம் என்றார்.
நெடுமாறன் பொடாவில் நேற்று முன் தினம் கைதாகியுள்ள நிலையில் வீரபாண்டியனுக்கு புலிகள் ஆதரவு வழக்கில் 2 ஆண்டு சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்பு நேற்று மாலை வெளியானது.