For Daily Alerts
Just In
தமிழர் மீதான ஒடுக்குமுறை: திருமாவளவன்
சென்னை:
பொடா சட்டத்தை நீக்கக் கோரி காங்கிரஸ் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசப் போவதாகவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன்ஆகியோர் பொடா சட்டத்தின் கீழ் தவறான முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் பழிவாங்கல்கள் தொடர்கின்றன என்பதற்கு உதாரணம் தான் நெடுமாறனின் கைது. தமிழர்கள் மீதான, தமிழ் இனத்தின்மீதான ஒடுக்குமுறை இது.
இந்தப் பொடா சட்டத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களைச் சந்தித்துப்பேசவுள்ளேன் என்றார் திருமாவளவன்.
Comments
cinema jayalalitha sri lanka mdmk vaiko Prabhakaran news kannappan pota tamil news thiruma valavan suba veerapandia
Story first published: Tuesday, September 24, 2002, 5:30 [IST]