நெடுமாறனை சென்னை சிறைக்கு மாற்றக் கோரி டி.ஜி.பிக்கு நோட்டீஸ்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இதயநோயாளி என்பதால் அவரை கடலூர் சிறையிலிருந்து சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி.நெய்ல்வால் மற்றும் சிறைத்துறை ஐ.ஜி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நெடுமாறனின் வழக்கறிஞர் சந்திரசேகரன் அனுப்பியுள்ள இந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 1ம் தேதி கைது செய்யப்பட்டு பொடா தனி நீதிமன்ற நீதிபதி முன் நெடுமாறன் ஆஜர்படுத்தப்பட்டார்.
தனக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அடிக்கடி மருத்துவ வசதி பெற வேண்டியுள்ளதால்சென்னை மத்திய சிறையில் தன்னை வைக்க வேண்டும் என்று அப்போது நெடுமாறன் நீதிபதியிடம் கோரிக்கைவிடுத்தார்.
நீதிபதி எல். ராஜேந்திரனும் அதற்குச் சம்மதித்து நெடுமாறனை சென்னை மத்தியச் சிறையில் வைக்கும்படிஉத்தரவிட்டார்.
நீதிபதியின் வீட்டிலிருந்து சென்னை மத்திய சிறைக்குக் கொண்டுவரப்பட்ட நெடுமாறன், அங்கு காவலில்வைக்கப்படாமல் திடீரென்று கடலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
நீதிபதி உத்தரவு பிறப்பிக்கும் போது விசாரணை அதிகாரியும் உடன் இருந்தார். அப்படி இருந்தும் சென்னைசிறையில் நெடுமாறனை அடைக்காமல் கடலூர் சிறைக்கு போலீசார் கொண்டு போய் விட்டனர். அவர்கள்நீதிபதியின் உத்தரவை மதித்து நடக்கவில்லை.
போலீசார் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனர். இது மனித உரிமையை மீறும் செயலாகும்.
கடலூர் சிறையில் இருக்கும் போது நெடுமாறனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு டி.ஜி.பியும்சிறைத்துறை ஐ.ஜியும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
அவரை உடனடியாக சென்னை சிறைக்கு மாற்றவில்லை என்றால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்என்று அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.