வீதி வீதியாக சென்று வேட்டி, சேலை விற்கத் தயார்: வீரமணி
சென்னை:
கைத்தறி நெசவாளர்களின் துயர் துடைப்பதற்காக அவர்கள் நெய்து வைத்துள்ள வேட்டி, சேலைகளை கூடையில் எடுத்துக் கொண்டு வீதி வீதியாக சென்று விற்கத் தயாராக உள்ளேன் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி. வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
ஏழை நெசவாளர்கள் பட்டினியால் வாடும் துயரத்தைப் போக்குவதற்காக போர்க்கால அடிப்படையில் அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவது சந்தோஷத்தை அளித்துள்ளது.
நியாய விலைக் கடைகளில் மலிவு விலை சேலை, வேட்டி என்பதுபோல, கைத்தறி நெசவாளர்களிடமிருந்து சேலைகள், வேட்டிகளைப் பெற்று அதைக் கூடையில் எடுத்துக் காண்டு வீதி வீதியாக சென்று விற்பனை செய்து அந்தப் பணத்தை அரசுக்குக் கொடுக்க திராவிடர் கழகம் தயாராக உள்ளது.
இதை அதிமுகவும், பிற பொது நல அமைப்புகளும் கூட செய்யலாம் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் வீரமணி.