For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெடுமாறனின் மதுரை அலுவலகத்திலும் சோதனை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனின் சென்னை வீட்டில் சோதனை நடத்திய அதே நேரத்தில்மதுரையில் உள்ள அவருடைய கட்சி அலுவலகத்திலும் க்யூ பிராஞ்ச் போலீசார் சோதனை நடத்தினர்.

மதுரையில் உள்ள நெடுமாறனின் கட்சி அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தி விடுதலைப்புலிகள்தொடர்பான சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

முன்னதாக சென்னை-மயிலாப்பூரில் உள்ள அவருடைய வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போதுநெடுமாறனின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் இருந்தனர். மாலை 4 மணிக்குத் தொடங்கிய இந்தச்சோதனை 6.30 மணி வரை சோதனை நடந்தது.

சோதனை முடிந்ததும் நெடுமாறனின் வழக்கறிஞர் சந்திரசேகர் நிருபர்களிடம் கூறுகையில்,

புலிகளை ஆதரித்து எழுதிய புத்தகங்கள், புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நெடுமாறன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்பட 30 பொருட்களைப் போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் அந்தப் படங்கள் இந்தியாவில் புலிகள் இயக்கம் தடை செய்யப்படுவதற்கு முன்பாகவே எடுக்கப்பட்டவை.புத்தகங்களும் அதற்கு முன்பு எழுதியவை தான் என்றார் சந்திரசேகர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X