For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருட்டு மணல் லாரிகளை பிடித்துக் கொண்டிருந்த ஆர்.டி.ஓ. மாரடைப்பால் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த லாரிகளைப் பிடித்துக் கொண்டிருந்த கோட்ட வருவாய்அதிகாரி (ஆர்.டி.ஓ.) மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.ஞணூ>
காஞ்சிபுரம் அருகே வாலாஜாபத் பகுதியில் ஆர்.டி.ஓ. மாரிமுத்து என்பவர் திருட்டு மணல் லாரிகளைப் பிடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. வயிறும் அதிகமாக வலித்துள்ளது. ஆனாலும்தொடர்ந்து பணியைச் செய்து வந்தார்.

வாலாஜாபாத் முடிந்தவுடன் அம்பி என்ற இடத்திற்குச் சென்றார். அங்கு திருட்டு மணல் லாரிகளை மடக்கிப்பிடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு மேலும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு அங்கேயே மயங்கிவிழுந்தார்.

உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாகடாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் அரக்கோணம் அருகே உள்ள அவரது சொந்த கிராமத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X